ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தில் என்ஜினில் புகை வந்ததால் பேருந்தில் இருந்து இறங்கி பயணிகள் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூரில் இருந்து பச்சகுப்பம் மேல்பட்டி வழியாக குடியாத்தம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது 20க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தனர். அப்போது, பேருந்து என்ஜினில் இருந்து திடீரென புகை வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை விட்டு அலறியடித்து இறங்கி ஓடியுள்ளனர்.
மேலும் படிக்க: நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை… அத்துமீறினால் அபராதம், சிறை தண்டனை என அறிவிப்பு!!!
இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து இன்ஜினில் புகை வருவதை சரி செய்ய முயன்ற போது, பேருந்தில் உதிரிபாகங்கள் (ஸ்பேர் பார்ட்ஸ்) இல்லாததால் பேருந்து நிலையத்திலிருந்த தனியார் பேருந்து ஓட்டுநரிடம் கேட்டு பெற்று பின்னர் அங்கிருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இன்ஜினில் வந்த புகையை அனைத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு 11.50க்கு செல்லக்கூடிய அரசு பேருந்து சுமார் 2:30 மணி நேரமாக பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டதால், பச்சகுப்பம், அழிஞ்சிகுப்பம், மேல்பட்டி, வளத்தூர், செம்பேடு, குடியாத்தம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும், பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர்.
மேலும் அரசு பேருந்துகளில் ஏற்படும் பழுதுகளை சரி பார்க்க கூட உதிரி பாகங்கள் இல்லாத அவல நிலை நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
This website uses cookies.