சுவர் ஏறி குதித்து குழந்தையை கடத்த முயற்சி… வடமாநில வாலிபருக்கு தர்ம அடி : இணையத்தில் வைரலான தகவல் உண்மையா?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த காவல்துறை, அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தியானது என்று விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டல் முன்பு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சாலையோரமாக சுற்றித்திரிந்துள்ளார். மேலும் அவர் அங்கு நின்றுகொண்டிருந்த 3 வயதுடைய குழந்தையை அழைத்துள்ளார்.
இதைப்பார்த்த குழந்தையின் பெற்றோர் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அதற்கு அவர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கவே அவர் தமிழ் மொழியில் பேசாமல் வேறு மொழிகளில் ஏதேதோ பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த வாலிபர் வடமாநில வாலிபராக இருக்கலாம் என்றும், குழந்தையை கடத்த முயற்சி செய்திருக்கலாம் என்று கருதியும் அந்த வாலிபரை பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதில் அவர் காயமடைந்தார். உடனே இதுகுறித்து பொதுமக்கள், விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த நபரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதே நபர் இன்று காலையில் விழுப்புரம் அருகே அய்யன்கோவில்பட்டு பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள், அவரை அடித்து அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இந்த சூழலில்தான் விழுப்புரத்தில் குழந்தையை கடத்த முயற்சி செய்ததாக கருதி பொதுமக்கள் தாக்கியுள்ளனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா? அவர் உண்மையிலேயே குழந்தையை கடத்த முயற்சி செய்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.