அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சத்யன். இவர் உடையார்பாளையத்தில் மரப்பட்டறை தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் தனது மனைவி இரு குழந்தைகளுடன் மதுரைக்கு கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு திருச்சி சஞ்சீவி நகரில் உள்ள ஹோட்டலில் தனது குடும்பத்துடன் உணவருந்தினார்.
உணவருந்திய பிறகு தனது காரில் ஏறியபோது, முகமூடி அணிந்த ஒரு நபர் காரில் ஏறி சத்யனின் குழந்தை கழுத்தில் கைத்துப்பாக்கி போன்று ஒன்றை வைத்து கொண்டு சத்யனிடம் உடனடியாக காரை எடு இல்லையென்றால் சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைக் கண்டு பயந்து போன சத்தியன் மனைவி குரல் எழுப்பவே அங்கிருந்த பொதுமக்கள் கார் அருகே விரைந்து வந்தனர்.
இதை கண்ட அந்த முகமூடி நபர் அங்கிருந்து வேகமாக தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சத்தியன் அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முகமூடி நபர் அந்த பகுதிக்கு ஆட்டோவில் வந்து இறங்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆட்டோ அரியமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் என்பவரது ஆட்டோ என்பது தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் ஸ்டாலினிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சினிமா பாணியில் தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்த முயன்ற நபரால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில், இன்று (மார்ச் 17) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 210…
சென்னையில், காதலியின் கொலைக்கு பழிவாங்க நினைத்த நபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.…
அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விழுப்புரம்: விடுதலைச் சிறுத்தைகள்…
சதீஷ் இப்போது எப்படி இருக்கிறார்? 2002 ஆம் ஆண்டு தங்கர் பச்சன் இயக்கத்தில் பார்த்திபன்,நந்திதா தாஸ்,தேவயானி ஆகியோர் நடிப்பில் வெளியான…
கூலி படத்தின் ஓடிடி மற்றும் வெளிநாட்டு உரிமம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’…
நாங்கள் இன்னும் விவாகரத்து பெறவில்லை கடந்த ஆண்டு நவம்பரில்,ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் 29 ஆண்டு…
This website uses cookies.