சென்னையில் உள்ள பிரபல தீம் பார்க்கில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான (விஜிபி) தீம் பார்க் செயல்பட்டு வருகிறது. இங்கு, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுமாம். இந்த நிலையில், கடந்த ஜனவரி 17ஆம் தேதி, சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 19 மற்றும் 16 வயதுடைய இரண்டு மகள்களுடன் இங்கு வந்துள்ளார்.
அப்போது, அந்த தீம் பார்க்கில் உள்ள நீர் சறுக்கு பகுதியில், மூத்த மகளும், இளைய மகளும் சறுக்கிய பொழுது, அங்கு பணியில் இருந்து ஊழியர் ஒருவர் மகள்களிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக இது குறித்து தீம் பார்க் நிர்வாகத்திடம் தாய் புகார் அளித்துள்ளார்.
ஆனால், அதற்கு தீம் பார்க் நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்களின் தாய், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஊழியர் சுரேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத்தானே செய்யும்..’ அப்பாவுக்கு அண்ணாமலை கண்டனம்!
மேலும், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்ததை சுரேந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து, சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக தீம் பார்க் நிர்வாகத்திடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.