கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், ராஜகுமாரி பகுதியை சேர்ந்தவர் பினில் (35) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று பெரம்பலூரில் சரக்கு ஏற்றுவதற்காக நாமக்கல்லில் இருந்து தொட்டியம் வழியாக முசிறி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி – நாமக்கல் மெயின் ரோட்டில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் இருந்த உணவகம், பெட்டி கடைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், 3மின் கம்பங்கள் மற்றும் உணவகம், பெட்டி கடைகள் முன்பகுதி சேதம் அடைந்தது. மின் கம்பத்தில் இருந்த கம்பிகள் அறுந்து விழுந்தது தகவல் அறிந்த மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தால்
பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் காவல்துறையினர் லாரி டிரைவர் பினில் என்பவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படிருந்ததால் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.