மக்களுக்கு பிரச்னை என்று சொன்னால், களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய எங்கள் விஜய் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மாணவர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “அன்புச் சகோதரர் விஜய். விஜய், எங்கள் விஜய். மக்களுக்கு பிரச்னை என்று சொன்னால், களத்தில் இறங்கி பணியாற்றக் கூடிய எங்கள் விஜய். எதிர்கட்சியாக இருந்தபோது, பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என வரும். அப்போது, அன்றைக்கு இருந்த காவல்துறை, ஆட்சியாளர்கள் அடக்குமுறையோடு பலமுறை சிறைக்குச் சென்ற எங்கள் விஜய்.
இப்போது பெய்த மழை என்று சொன்னாலும், உடனடியாக களத்தில் இறங்கி, மக்களுக்குத் தேவையானதை, உடனடியாக தன்னால் முடிந்தவரை செய்து வரும் எங்கள் விஜய். அண்ணாதுரை கூறியது போன்றே, மக்களுடன் நில், மக்களுக்கு என்ன தேவையோ அதனை அங்கிருந்து செய் என்றார்.
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு.. விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி : திணறிய மதுரை!
அதேபோல், மக்கள் கேட்பதை, உடனடியாக செவிசாய்த்து அதனை நிவர்த்தி செய்பவர்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அல்ல, மாறாக திமுக மாணவர் அணி நிர்வாகி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.