பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம் தான் எனக் கூறி தந்தை – மகன் மோதலுக்கு பதிலளித்துள்ளார், அன்புமணி ராமதாஸ்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கிப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் இளைஞர் அணித் தலைவராக முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
இவ்வாறு, தனது மகள்வழிப் பேரனை அறிவித்ததால் ஆவேசமடைந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அனுபவசாலிகளுக்கு பதவி கொடுங்கள் எனக் கூறியது மட்டுமல்லாமல், தன்னுடைய பனையூர் அலுவலகம் வந்து பாருங்கள் எனத் தொண்டர்களிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
இதனையடுத்து, பாமக எம்எல்ஏ ஜி.கே மணி தலைமையிலான குழுவினர், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதன்படி, இன்று முக்கிய நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக திண்டிவனம் அடுத்த, தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தனர். தொடர்ந்து அன்புமணியும் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “இன்று தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸிடம் கட்சியின் வளர்ச்சி பற்றியும், 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும், சித்திரை முழு நிலவு மாநாடு பற்றியும், போராட்டங்கள் பற்றியும், விவசாய மாநாடு பற்றியும், அடுத்த கட்டமாக என்னென்ன போராட்டங்கள் எந்தெந்தப் பகுதியில் செய்யலாம் எனவும் குழுவாக விவாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ’மணல் கடத்தலுக்கு துணைபோகும் உயரதிகாரிகள்’.. சிவகிரி காவலரின் திடீர் முடிவு.. தென்காசி போலீசாரின் பரபரப்பு அறிக்கை!
வரும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டாக உள்ளது. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதற்கேற்ப நடவடிக்கைகள் எல்லாம் எப்படி எடுக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது. மேலும், 10.5 சதவீத சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்தும் ராமதாஸ் தலைமையில் விவாதிக்கப்பட்டது.
எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம் தான். உட்கட்சி பிரச்னை குறித்து நீங்கள் பேச வேண்டாம், நாங்கள் பேசிக் கொள்வோம்” எனத் தெரிவித்தார். இருப்பினும், முகுந்தனுக்கு வழங்கப்பட்ட பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.