Categories: தமிழகம்

சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து.. நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற எம்.பி.,மகள் கைது..!

சென்னையில் நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது காரை ஏற்றுக்கொன்ற ஆந்திர எம் பி யின் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர், டைகர் வரதராச்சாரி சாலையோரமாக நடை பாதையில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஊரூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் மீது ஏறியது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார். விபத்தை பார்த்ததும் மக்கள் அந்த காரை தடுக்க முயன்றனர். காரில் இருந்த இரண்டு பெண்களும் காருடன் தப்பி சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவானதை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், காரில் பெண்கள் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என தெரிய வந்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் பீடா மஸ்தான் புதுச்சேரியில் தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து, பீடா மாதுரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடந்து, பீடா மாதுரி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆந்திர எம் பி யின் மகள் பீடா மாதிரி காவல் நிலையத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

3 மணி நேர உண்ணாவிரதத்தை மறந்து விடுவோமா? கச்சத்தீவு கபட நாடகம் நடத்தும் திமுக : அண்ணாமலை அட்டாக்!

தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…

45 minutes ago

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

2 hours ago

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

2 hours ago

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

2 hours ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

2 hours ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

3 hours ago

This website uses cookies.