Categories: தமிழகம்

சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து.. நடைபாதையில் தூங்கியவர் மீது காரை ஏற்றி கொன்ற எம்.பி.,மகள் கைது..!

சென்னையில் நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீது காரை ஏற்றுக்கொன்ற ஆந்திர எம் பி யின் மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெசன்ட் நகர், டைகர் வரதராச்சாரி சாலையோரமாக நடை பாதையில் சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து நடை பாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஊரூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பவர் மீது ஏறியது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார். விபத்தை பார்த்ததும் மக்கள் அந்த காரை தடுக்க முயன்றனர். காரில் இருந்த இரண்டு பெண்களும் காருடன் தப்பி சென்றனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவானதை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், காரில் பெண்கள் இருந்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறினர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., பீடா மஸ்தான் ராவின் மகள் பீடா மாதுரி என தெரிய வந்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் வசிக்கும் பீடா மஸ்தான் புதுச்சேரியில் தொழில் செய்து வருகிறார். இதனையடுத்து, பீடா மாதுரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடந்து, பீடா மாதுரி மீது விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆந்திர எம் பி யின் மகள் பீடா மாதிரி காவல் நிலையத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

15 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

15 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

17 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

17 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

18 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

18 hours ago

This website uses cookies.