Categories: தமிழகம்

சென்னையில் விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா வைத்திருந்த ஆந்திர இளைஞர் கைது : சிக்கலில் பிரபல தனியார் கல்லூரி…!!!

காஞ்சிபுரம் : கல்லூரி மாணவர்களுக்கு விநியோகம் செய்ய எடுத்து சென்ற 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்த போலீசார் ஆந்திராவை சேர்ந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம்  மாவட்டம் வல்லக்கோட்டை  பகுதியில் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வாளர் வசந்தி அவர்கள் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சாய் குமார் (வயது 22) என்பவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் பையில் 5 பொட்டலங்களாக 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சாய்குமார் இடம் விசாரணை செய்ததில் SRM கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்காக இந்த கஞ்சா பார்சல் விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சாய்குமார் லஞ்ச ஒழிப்பு சட்டம் , போதை மருந்துகள் உளவெறியூட்டம் சட்டம் 1985 கீழ் வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறைக்கு அனுப்பப்பட்டார்.

சாய்குமார் அளித்த தகவலின் பேரில் எஸ்ஆர்எம் கல்லூரியில் விரைவில் சோதனை செய்யப்படும் எனவும் சமீபகாலமாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருவது வருத்தத்தை அளிக்கின்றது எனவும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறையின் ஆய்வாளர் வசந்தி கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

35 minutes ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

56 minutes ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

15 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

16 hours ago

This website uses cookies.