ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வந்த ஆறு பேர் கைது. ஒன்பது கிலோ கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்.
ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக மாநகரப் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநகர தனிப்படை போலீசார் முத்தணம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும்படி வந்த சரக்கு ஆட்டோவை ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் ஆட்டோவில் ஒன்பது கிலோ கஞ்சாவும், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சரக்கு ஆட்டோவில் வந்த திருப்பூர் முத்தணம்பாளையத்தை சேர்ந்த ஜெபராஜ், கரட்டாங்காடு சேர்ந்த ராஜா, செட்டிபாளையத்தை சேர்ந்த தீனதாயளன், பாலகிருஷ்ணன், சுதன், வீரபாண்டியை சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
மேலும் இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் சப்ளை செய்து சம்பாதிக்க திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது .
இதனையடுத்து 6 பேரையும் கைது செய்த நல்லூர் போலீசார் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.