மதுரை : பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணமடைந்ததால் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள வைத்தியநாத பிரதான சாலையின் அருகே உள்ள ஓலைக் குடிசையில் வசித்து வந்தவர் எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா.
இவர் அதே பகுதியில் சுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் ஓலைக் குடிசையில் எலிகளுடன் வசித்து வந்ததால் அவர் அப்பகுதி மக்களால் எலியன் சித்தர் என அழைக்கப்பட்டு வந்தார்.
சித்தர் யாரிடமும் பேசாமல் இருப்பவர். சித்தரை கண்டு அவரிடம் அருள் வாக்கு வாங்கி ஆசி பெற வேண்டும் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மக்கள் சித்தரை காண அதிக அளவில் மாலை நேரத்தில் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா காலமானார். இது குறித்த தகவல் அறிந்த அவரின் பக்தர்கள் கூடினர். அவருக்கு ஆளுயர மாலைகள் அணிவித்துச் சென்றனர்.
மக்கள் கொடுக்கும் எளிய உணவுகளை உண்டு வாழ்ந்து வந்த ஆண்ட்ரூஸ் சித்தர், வயது முதிர்வின் காரணமாக அவரது 90-வது வயதில், இன்று (மே 4) அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவரது இறுதி ஊர்வலம் மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
அவர் வாழ்ந்த குடிசையிலேயே அவரை அடக்கம் செய்ய இட வசதி இல்லாத காரணத்தால், மக்கள் தாமாக முன்வந்து அவரது குடிசை அமைந்திருந்த சாலையிலேயே 7 லட்சம் ரூபாய் பணம் சேகரித்து சிறு இடம் ஒன்றை வாங்கி அதில் ஆண்ட்ரூஸ் சித்திரை அடக்கம் செய்தனர்.
சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…
களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…
வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…
சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…
This website uses cookies.