தமிழகம்

இந்து அறநிலையத்துறை நிலத்தில் ஞானசேகரன் வீடு.. அரசே சமர்ப்பித்த ஆதாரம்!

அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரத்தில் கைதான ஞானசேகரனின் வீடு கோயில் நிலத்தில் உள்ளதாக வருவாய்த்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரிடம், 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞானசேகரன் வீட்டை சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பினர் சோதனை செய்தனர். இதில், இரண்டு அட்டை பெட்டிகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், வருவாய்த் துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ஞானசேகரனின் வீடு அமைந்திருக்கும் இடம் யாருக்குச் சொந்தமானது என விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஞானசேகரன் வீடு அமைந்துள்ள மண்டபம் சாலை மற்றும் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும், நேற்று முன்தினமும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ஞானசேகரன் வீடு மட்டுமல்லாமல், அருகில் உள்ள அனைத்து வீடுகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அந்த இடம் முழுவதும் திருவான்மியூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிலத்திற்குச் சொந்தமானது என தெரிய வந்தது. பின்னர், கிண்டி தாசில்தார் மணிமேகலை தலைமையில், அதிகாரிகள் அந்த இடத்தை அளவிட்டனர்.

இதையும் படிங்க: பிரபல நடிகையிடம் பாலியல் அத்துமீறல்… பதுங்கிய பிரபல தொழிலதிபர் கைது!

இதன் முடிவில், இந்த இடம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானது என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். காரணம், 20க்கும் மேற்பட்ட வீடுகள், இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் நிலத்திலும், சில வீடுகள் மாநகராட்சி நிலத்தின் சில நூறு அடிகளை சேர்த்தும் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, வருவாய்த் துறையினர் அறிக்கை சமர்பித்துள்ளனர். இதில், கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் உள்ள வீடு, கோயில் நிலத்தில் உள்ளதால் அதை ஞானசேகரனின் சொத்தாக கருத முடியாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டின் ஒரு பகுதி கோயில் நிலத்திலும், நுழைவுவாயில் போன்றவை மாநகராட்சி நிலத்திலும் இருப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

13 minutes ago

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

1 hour ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

2 hours ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

2 hours ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

3 hours ago

This website uses cookies.