கோவை : உக்கடம் கோட்டை ஈஸ்வரனை தரிசனம் செய்ய வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை உபா சட்டத்தில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாகவே, மத்திய உளவுத்துறை எச்சரித்தும், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு ஏன் எடுக்கவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. மேலும், மாநில உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாகவும், இந்த கார் வெடிப்பு சம்பவத்தை தடுக்க தவறியதைக் கண்டித்து, கோவையில் 31ம் தேதி பாஜக சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்தப் பந்த்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு வந்த போது, தமிழக பாஜகவின் தலைமையால் இந்த பந்த் அறிவிக்கப்பட வில்லை என்றும், கோவை மாவட்ட பாஜகவினர் இந்த பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், கோவை மாவட்ட பாஜகவினர் அறிவித்த பந்த், தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், வரும் 31ம் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரனை தரிசனம் செய்ய வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.