அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என அண்ணாமலை ஏற்கனவே குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க : யார் அந்த SIR? மாணவியின் பகீர் வாக்குமூலம்.. அதிரவைக்கும் FIR!
இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக சென்னையில் அரசியல் கட்சிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றன. ஒரு பக்கம் அதிமுக மறுபக்கம் பாஜக போராட்டம் நடத்தியது.
இதில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் போராட்டத்தில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசையை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர். அதே சமயம் அதிமுகவினரையும் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.
மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் ஸ்டாலின் அவர்களே? #ShameOnYouStalin என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.