தமிழகம்

கோபாலபுரம் வீட்டைத் தாண்டி யாருக்கும்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

கோபாலபுரம் வீட்டைத் தாண்டி வெளியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ஈச்சனாரி பகுதியில், ரோட்டரி அமைப்பு சார்பில் மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை, “பட்ஜெட்டில் நேரடி நிதிப் பகிர்வு மூலம் நிதி வந்துவிடுகிறது. மோடி அரசு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம், நிதிப் பகிர்வு அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. சில இடங்களில் மூன்றரை மடங்கு உயர்ந்திருக்கிறது.

46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தேசிய நெடுஞ்சாலை வேலைகள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எதன் அடிப்படையில் தொடர்ந்து பட்ஜெட்டைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் எனத் தெரியவில்லை. முதலமைச்சருக்குத்தான் இன்றைய நாட்களில் டப்பிங் தேவைப்படுகிறது.

அவருடைய குரலாக அறிவாலயத்திலிருந்து பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சிக்கு எங்கும் டப்பிங் தேவைப்படுவதில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு டப்பிங் செய்வதற்காக சந்தானம் தேவைப்படுகிறார். முதலமைச்சருக்கு டப்பிங் செய்வதற்கு பல அமைச்சர்கள், அதுவும் அதிமுகவிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள்.

35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவிலிருந்து வந்தவர்கள்தான். அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்கள் தான் முதலமைச்சருக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கின்றனர். CAG auditக்கு இந்து அறநிலைத்துறையினர் ஆவணம் சமர்ப்பிப்பதே இல்லை.

எவ்வளவு பணத்தை எடுத்தார்கள், எங்கு எடுத்தார்கள் என்ற கணக்கு யாருக்குமே தெரியாது. மருதமலை கோவிலில் தைப்பூசதன்று, எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது என்று பார்த்தோம். தமிழகத்தில் ஒரு உதவாதத்துறை இருக்கிறது என்றால், அது இந்து அறநிலையத்துறை தான்.

இதையும் படிங்க: என்கிட்ட வேலை பார்த்த பையன் அவன்…இசைஞானி போட்ட நாக் அவுட் பிளான்.!

முதலமைச்சரால் ஒரு ஏர் ஷோ ஒழுங்காக நடத்த முடியவில்லை. இவர், மணிப்பூர் அரசியல் பற்றி பேசுகிறார். பெங்களூரில் நடக்கும் ஏர் ஷோவைச் சென்று பார்த்து வர வேண்டும். தமிழக முதலமைச்சர் அவரின் வேலையைச் சரியாக செய்யாமல், இந்தியாவில் கும்பமேளாவில், அது நடக்கிறது இது நடக்கிறது என குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சொந்த மாநிலத்தில் நடக்கும் பிரச்னைகளை ஏன் பேசுவது இல்லை? அண்ணா பல்கலைக்கழக பெண் பாலியல் கொடுமையில் இதுவரை எதுவும் தெரியவில்லை. அவர் வீட்டில் இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். கோபாலபுரம் வீட்டைத் தாண்டி வெளியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

24 minutes ago

எத்தனை வருடம் தான் காத்திருப்பது? மீண்டும் மீண்டும் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ!

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…

46 minutes ago

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

2 days ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 days ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

2 days ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

2 days ago

This website uses cookies.