Categories: தமிழகம்

பால் விலை உயர்வு குறித்து விமர்சிக்கும் அண்ணாமலை.. ஒரே ஒரு வார்த்தையில் அமைச்சர் சொன்ன பதில்!!

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் மு பெ சாமிநாதன் பெருமிதமாக கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் 69ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் மாநில செய்தித் துறை அமைச்சர் மு பெ சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மற்றும் பல்லடம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர திமுக செயலாளர் ராஜேந்திர குமார், ஒன்றிய சேர்மன் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் கட்சி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் மு.பே சாமிநாதன் பரிசளித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். பேச்சு கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பரிசு பொருட்களையும் அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆணையின்படி மாநிலம் முழுவதும் 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பல்லடத்திலும் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கங்களை நம்பி கடன் பெற்று உள்ள விவசாயிகள் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு பரிசை அளித்து பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பொதுமக்கள் பெற்ற பயிர்க் கடன் மற்றும் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 63 ஆயிரத்து 7 88 பேர் பயனடையும் வகையில் சுமார் 463 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் கடன் மூலம் 26 ஆயிரத்து 7 17 விவசாயிகள் 279 கோடி ரூபாய் பயிர் கடன் பெற்றது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நகை கடன் பெற்றவர்கள் 274 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு மொத்தம் 62833 பேர் பயனடைந்துள்ளனர் 553 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாலானையும் திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளன. அதேபோல பொதுமக்களிடமிருந்து வர பெற்றுள்ள கோரிக்கை மனுக்கள் குறித்து திமுக அரசு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில் தேங்காய்க்கு விலை இல்லாத காரணத்தால் நியாய விலை கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பெரும்பாலும் தமிழகத்தில் கடலை எண்ணெய் புழக்கத்தில் உள்ளது பிற மாநிலங்களில் மட்டுமே தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகம் உள்ளதால் இது குறித்து முதல்வர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

மேலும் மதுரையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் நிதியமைச்சர் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று தெரிவித்த கருத்து குறித்து அமைச்சரிடம் கேட்டபோது அது குறித்து தானும் பத்திரிக்கை செய்தியில் பார்த்ததாகவும் அந்த செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் கூறினார்.
கூட்டுறவுத்துறை உணவுத்துறை இரண்டும் ஒரே துறையாக மாற்றப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதில் எவ்வித குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை அது குறித்த ஆலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்லடத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மு.பே சாமிநாதன் கூறுகையில் 7 மீட்டராக நாகப்பட்டினம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை இருந்தது அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் 11 மீட்டர் ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது.

தற்போது சாலை திட்ட பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டபோது மத்திய அரசு திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது இருந்த போதும் மாநில அரசு புறவழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து தனது கோரிக்கையை வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாக இருப்பதாகவும் கடந்த காலத்தில் அதிமுக அரசு ஒருமுறை மின் கட்டண உயர்வை அமல்படுத்தியதாகவும் இருந்த போதும் விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்கியிருப்பதாகவும் மேலும் குறைப்பது குறித்து முதல்வருடன் மின்சாரத் துறை அமைச்சரும் பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

பால் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பிய போது அமைச்சர் சாமிநாதன் கூறுகையில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் பால் விலை உயர்வு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அமைச்சர் சாமிநாதன் அது குறித்து பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

15 minutes ago

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

48 minutes ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

1 hour ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

1 hour ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

2 hours ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

17 hours ago

This website uses cookies.