தமிழகம்

கல்விக்கடன் என்ற பெயரில் சாதியப் பாகுபாடு? – அண்ணாமலை கேள்வி!

குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “கல்விக் கடன் ரூ.48.95 கோடி ரத்து என்று அறிவித்துள்ளது திமுக அரசு. ஒவ்வொரு தேர்தலின்போதும், அலங்கார வாக்குறுதியாக, கல்விக் கடன் ரத்து என்று நாடகமாடி ஏமாற்றுவது, திமுகவின் வழக்கம்.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை, தமிழகத்தின் கல்விக் கடன் நிலுவை மொத்தம் ரூ.16,302 கோடி. இந்த நிலையில், வெறும் ரூ.48.95 கோடியை மட்டும் ரத்து செய்வதால் யாருக்கு என்ன பயன்? கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதி எண் 159ல், மாணவர்களின் கல்விக் கடனை தமிழக அரசே திருப்பிச் செலுத்தும் என்று கூறி நான்கு ஆண்டுகள் ஆகின்றன.

திமுகவின் இந்த வாக்குறுதியை நம்பி, கல்விக் கடனைத் திரும்பச் செலுத்தாமல், கடந்த 2023ஆம் ஆண்டு, வாராக்கடனாக, ரூ.4,124 கோடி அறிவிக்கப்பட்டு, அதனால் வழக்குகளைச் சந்தித்தும், சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்காமலும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்.

தற்போது, கடனை வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண முடியாததால் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என்று திமுக அரசு காரணம் கூறியிருப்பது நகைப்பிற்குரியது. கல்விக் கடனை ரத்து செய்வோம் என்ற திமுகவின் வாக்குறுதியை நம்பிக் காத்துக்கொண்டிருந்த மாணவ சமுதாயம், ஓடி, ஒளிந்து, தலைமறைவானால்தான் கடனை ரத்து செய்வோம் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக.

நாட்டிலேயே கல்விக் கடன் மிக அதிகமாக நிலுவையில் இருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் பலப்பல தேர்தல்களாகத் தொடர்ந்து ஏமாற்றி வருவதுதான். திமுகவின் பொய்களுக்கு, இளைஞர்கள் எதிர்காலம் பாழாக வேண்டுமா?

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம்… அவமானத்தால் விதியை மாற்றி எழுதிய கணவன்!

உடனடியாக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதன்படி, தமிழக மாணவர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கல்விக் கடன்களையும் ரத்து செய்து, தமிழக அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட சமூக மாணவர்களுக்கே கல்விக் கடன் ரத்து என்று, மாணவ சமுதாயத்திடம், ஜாதிப் பாகுபாடைத் தூண்டும் விதமாகச் செயல்பட வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.

Hariharasudhan R

Recent Posts

முன்பதிவில் சூர வசூல்…மரண சம்பவ காட்டும் மோகன்லாலின் ‘எம்புரான்’.!

முன்பதிவில் சாதனை படைக்கும் எம்புரான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பிருத்விராஜ், இயக்குனராகவும் சாதித்து வருகிறார்,அந்த வகையில்…

24 minutes ago

ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்.. வெளியான பகீர் தகவல்!

சென்னையில், இன்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

1 hour ago

மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு… Pooja Hegde போட்டோஸ்!

பூஜா ஹெக்டே காட்டுல மழை என்றெ சொல்லாலாம். காரணம் 2012ல் முதன்முறையாக சினிமாவுக்கு அறிமுகமான பூஜா ஹெக்டேவின் முதல் படமே…

1 hour ago

ரத்தத்தில் சிலை…கொடூர வலி…ஷிகான் ஹுசைனி மரணத்தின் பின்னணி.!

ஷிகான் ஹுசைனியின் மரணம் ரத்த புற்றுநோயால் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைன் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.இவர்…

2 hours ago

வேறு நபருடன் சல்லாபம்? தாயும், மகளும் படுகொலை : அலற விட்ட இரட்டைக்கெலை!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ஏலூருவில் உள்ள ஏ.எஸ்.ஆர் ஸ்டேடியம் பகுதியை சேர்ந்த முகமது சல்மாவை (38) ஜாம்பேட்…

2 hours ago

கடைசியில் போட்டிக்கு வரும் SK? திக்குமுக்காடப்போகும் பாக்ஸ் ஆபீஸ்!

விஜயின் ஜனநாயகன் ரிலீஸாகும் அதே நாளில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை: 2026ஆம் ஆண்டு…

2 hours ago

This website uses cookies.