Categories: தமிழகம்

இந்து அறநிலையத்துறை வளர்ச்சியடைய அண்ணாமலையே காரணம் : ட்விஸ்ட் வைத்த அமைச்சர் சேகர்பாபு!!

திருவள்ளூர் : இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் தமிழக முதல்வரின் ஆண்ட காலம் என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மேலூர் வடிவுடை அம்மன், பழவேற்காடு ஆதிநாராயண
பெருமாள் சமயேஸ்வரர் சிவன் கோவில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், கோவிந்தராஜன் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் நேரில் பார்வையிட்டு கோவில்களின் பழமைகள் பராமரிப்பு வழிபாடு முறைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு பேசுகையில், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக பணி துவங்கி 14 ஆண்டுகள் ஆகிறது.

உடனடியாக கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், மேலூர் திருவுடையம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 8 கோடி ரூபாய் செலவில் தங்கத்தேர் செய்யப்படும் என்றும் அடிப்படை பணிகள் அனைத்தும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

சிறுவாபுரி கோவில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு
விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர், சிதம்பரம் கோவிலில் ஐந்து பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. கள ஆய்வு செய்ய அரசாணை பிறப்பிக்கப்க்கப்பட்டுள்ளதாகவும் கோவில் சொத்து வழிபாட்டு கட்டணங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும்
கனகசபை தரிசனம் குறித்து நீதிமன்றம் முடிவின்படி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில்கள் புனரமைப்புக்கு 100 கோடி அரசு வழங்கியுள்ளதாகவும், இந்து சமய வரலாற்றில் இது முதல் முறையாகும். இந்தாண்டு 1500 திருக்கோவில்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மேலும் கிராமப்புற திருக்கோயில்கள் 1500 கோவில்களும் 1250 ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள கோயில்கள் தலா
2 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசு தலையீடு இருந்தால் தான் அனைத்து பணிகள் சிறக்கும். அண்ணாமலை போன்றவர்கள் விமர்சனங்கள் தங்கள் பணியை மேலும் மேம்படுத்தும்
என்றும் இந்து சமய அறநிலையத் துறையின் பொற்காலம் தமிழக முதல்வரின் ஆண்ட காலம் என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாகும் கூறினார்.

சட்டவிதிமுறைகள் மீறி தவறாக திருக்கோயில்களை பயன்படுத்தினால்தான் இந்து சமய அறநிலையத்துறை தலையிடும். சிறந்த முறையில் வழி வழியாக கோவில்களை நிர்வகிக்கும் தர்மகர்த்தாக்கள் அறங்காவலர்கள் விவகாரங்களில் இந்து சமய அறநிலைத்துறை தலையிடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

22 minutes ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

58 minutes ago

சத்தமே இல்லாமல் உதவி செய்யும் அஜித்… குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு!

ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…

1 hour ago

திமுகவில் 2 விக்கெட் காலி.. இன்னும் பல தலைகள் உருளும்.. பார்த்து ரசிக்கலாம் : ஹெச் ராஜா பகீர்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…

2 hours ago

பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை

விஜய் டிவியில் இருந்து விலகல் 90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக்…

2 hours ago

கார் விபத்தில் பிரபல பாடகி சின்னப்பொண்ணு இறந்துட்டாரா? பதறிய கனிமொழி!

தமிழ் சினிமாவில் நாட்புற பாட்டை பாடி புகழ்பெற்றவர் சின்னபொண்ணு. இவர் நாட்டுப்புற பாட்டையே அடிமாற்றாமல் சினிமாவிலும் தனது பாணியை அப்படியே…

2 hours ago

This website uses cookies.