தமிழகம்

குருட்டுப் பூனை.. Mental Checkup.. ஸ்டாலினை கடுமையாக சாடிய அண்ணாமலை!

முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவைப் பாதிக்கும் என யார் முதல்வருக்குச் சொன்னது? தொகுதிகள் மறுவரை பற்றி முதல்வருக்கு யார் சொன்னார்கள் எனத் தெரியாது.

அந்த மனிதன் யார் எனக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன். மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டும். முதல்வர் Fitஆக இருக்கிறாரா என சந்தேகம் எழுகிறது. வருடம் ஒருமுறை Mental Checkup செய்வார்கள், அது வழக்கம். காங்கிரஸ் ஏன் புரளி பரப்ப வேண்டுமென பிரதமர் கூறியுள்ளார்.

முதல்வர் ஏன் கபட நாடகத்தை அரங்கேற்ற வேண்டும்? மும்மொழிக் கொள்கை எதிர்ப்பில் அவர்கள் தோற்றுவிட்டார்கள். திமுகவின் தொண்டர்கள் பள்ளிக்குச் சென்று கொஞ்சமாவது படியுங்கள். இந்தியாவில் எந்த பாதிப்பும் வராது என பிரதமர் கூறியுள்ளார்.

2001ல் மறுசீரமைப்பு செய்திருக்க வேண்டும். முதல்வரிடம் யார் சொன்னார்கள் என்று அவர் சொன்னால், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்கும். மறுசீரமைப்பு வரும்போது தமிழகத்தில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு.
காங்கிரஸ் மாடல் மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டது.

காங்கிரஸ் போன்று முடிவெடுக்க மாட்டோம் என பிரதமர் கூறியுள்ளார். குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல் முதல்வர் நடந்து கொள்கிறார். மும்மொழிப் போருக்கு தயாராகட்டுமே. திமுகவின் மொழிப் போராட்டம் என்னவென்றால், அவர்கள் குழந்தைகளுக்கு மூன்று மொழி, மற்றவர்களுக்கு இரண்டு மொழி என்பதுதான்.

மூன்று மொழி படித்த சாதனையாளர்கள் முதல்வர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இரு மொழியால்தான் தமிழகம் முன்னேறி இருக்கிறது என்றால், முதல்வரின் கணக்கு வாத்தியார் யார் என பார்க்க வேண்டும். முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும்.

மொழி என்பது ஒரு ஆற்றல், அது சாதனைக்குத் துணைபுரியும். மூன்றாவது மொழியை அப்துல் கலாம் ஐயா வேண்டாம், ஜனாதிபதி ஆக மாட்டேன் எனக் கூறியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை இல்லை. ஓநாயும், ஆடும் சண்டை போட்டுக் கொள்வது போன்று உள்ளது.

இதையும் படிங்க: விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

அரசு ஊழியர்கள் பக்கம்தான் நாங்கள் இருப்போம். ஜாக்டோ ஜியோ பக்கம் இல்லை,
ஜாக்டோ ஜியோ இதற்கு முன்பு திமுகவிற்கு ஆதரவாக இருந்தவர்கள். தேர்தலின்போது திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர். இன்று ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் கபட நாடகமாக இருக்கலாம்.

கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தித்தாளில் பெட்டி செய்தியாக வர வேண்டும் என்பதற்கு தான். கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் காமெடிக்காக நடத்தப்படுவது. அதனால் கொடி விற்பனை செய்பவர்களுக்கு கொடி விற்பனையாகிறது. மும்மொழிக் கல்வி என்னுடைய குழந்தைகள் திராவிட மொழி (தெலுங்கு, கன்னடம், மலையாளம்) ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும், நான்காவது மொழியாக வட மொழி ஒன்றை (இந்தி, சமஸ்கிருதம்) கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

சூர்யாவை பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- பொதுமேடையில் விஜய்யை வம்பிழுத்த பிரபலம்!

கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

1 day ago

ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…

1 day ago

அதிகமான பாஜக எம்எல்ஏக்கள் இந்த முறை சட்டமன்றம் செல்வோம் : வானதி சீனிவாசன் உறுதி!

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…

1 day ago

நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…

1 day ago

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

1 day ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

1 day ago

This website uses cookies.