கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாஜக ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களையும், பாஜக 66 இடங்களையும், மஜத 19 இடங்களிலும் வெற்றி பெற்றன.
கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் தொகுதியில் 5வது முறையாக தமிழ்நாடு பாஜக பொறுப்பாளரான சி.டி.ரவி போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தம்மையா என்பவர் போட்டியிட்டார்.
இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.டி.ரவி 77,979 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்மையா 84,015 வாக்குகளைப் பெற்று, சுமார் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கோவை ஈச்சனாரி செல்வ மஹாலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளா்கள் பி.எல்.சந்தோஷ், வினோத் தவுடு, பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டுக்கான மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி மற்றும் தமிழ்நாட்டுக்கான மேலிட இணைப் பொறுப்பாளா் பி. சுதாகா் ரெட்டி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக தோல்வியைச் சந்தித்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களான பி.எல். சந்தோஷ், சிடி ரவி ஆகியோர் பாஜக செயற்குழு கூட்டத்திற்கு வந்துள்ளனர். பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக செயல்பட்ட அண்ணாமலை தான் இந்த செயற்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்கு அண்ணாமலை, சிடி ரவி உள்ளிட்டோர் வருகை தந்தபோது அவர்களுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அண்ணாமலை. செயற்குழு கூட்டம் பற்றி விளக்கினார் அண்ணாமலை. அப்போது கர்நாடகா தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
கர்நாடகா தேர்தல் தோல்வி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், எந்த பதிலும் அளிக்காமல் விறுவிறுவென கிளம்பிச் சென்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கூட்டத்தில், பாஜக தேசிய பொதுச் செயலாளா்கள் பி.எல்.சந்தோஷ், வினோத் தவுடு, பொதுச் செயலாளரும், தமிழ்நாட்டுக்கான மேலிட பொறுப்பாளருமான சி.டி.ரவி மற்றும் தமிழ்நாட்டுக்கான மேலிட இணைப் பொறுப்பாளா் பி. சுதாகா் ரெட்டி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக தோல்வியைச் சந்தித்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களான பி.எல். சந்தோஷ், சிடி ரவி ஆகியோர் பாஜக செயற்குழு கூட்டத்திற்கு வந்துள்ளனர். பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக செயல்பட்ட அண்ணாமலை தான் இந்த செயற்குழுவுக்கு தலைமை தாங்கினார்.
பாஜக மாநில செயற்குழு கூட்டத்திற்கு அண்ணாமலை, சிடி ரவி உள்ளிட்டோர் வருகை தந்தபோது அவர்களுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் அண்ணாமலை. செயற்குழு கூட்டம் பற்றி விளக்கினார் அண்ணாமலை. அப்போது கர்நாடகா தோல்வி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
கர்நாடகா தேர்தல் தோல்வி பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதும், எந்த பதிலும் அளிக்காமல் விறுவிறுவென கிளம்பிச் சென்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இதனால் அங்கிருந்த செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.