பழனி பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு வரவேற்பதற்காக வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற யாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாளை பழனிக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி, பழனி பகுதி பா.ஜ.க. சார்பில் பழனி பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் அண்ணாமலையை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு பேருந்து நிலைய வேல் ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க. பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் D-DENGU,M-MALERIA, K-KOSU DMK ஒழிப்போம் என்று திமுவினரை விமர்சனம் செய்து வைக்கபட்ட பேனர் அடையாளம் தெரியாத நபர் கிழிக்கபட்டதால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்பு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் பேருந்து நிலைய பகுதியில் திரண்டனர். தொடர்ந்து, பேனரை கிழித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், ஒட்டன் சத்திரம் டிஎஸ.பி முருகேசன், தாசில்தார் பழனிசாமி மற்றும் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று பழனியில் தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பா.ஜ.க. பேனர் கிழிக்கப்பட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.