நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இருப்பினும் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி நீடித்திருந்தால் பல இடங்களில் இரு கட்சிகளுமே வெற்றி பெற்றிருக்கும் என இரு கட்சி நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் மாநில அறிவுசார் பிரிவு தலைவரான கல்யாண ராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கலகத்தில் தான் நீதி பிறகும் என்பார்கள். அண்ணாமலை தனக்கு என்று டெல்லியில் ஒரு சூழலை உருவாக்கி வைத்துள்ளார். இதுதான் அவரை பாதுகாப்பாக வைத்துள்ளது.
மேலும் படிக்க: மிகப்பெரிய தப்பு பண்ணிட்டேன்.. இனி நான் அதை செய்ய மாட்டேன்.. பிரசாந்த் கிஷோர் வருத்தம்!
பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, இல.கணேசன் உள்பட கட்சியை வளர்க்க பாடுபட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழிசை செளந்தரராஜன் சொன்ன கருத்திற்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வழக்கம் போல் தேசிய தலைமையை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் எனவும், அவரிடம் சிறிது கூட அறம் என்பது கிடையாது எனவும் பாஜக நிர்வாகி கல்யாண் ராமன் தனது எக்ஸ் பதிவு மூலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.