கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் பெண்கள்… ஆள் இல்லாத நேரம் பார்த்து செய்யும் காரியம் ; அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
20 March 2024, 7:03 pm

அன்னூர், நாகம்மாபுதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரியும் பெண்களின் தில்லாலங்கடி வேலை குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஏபிஜே நகர், நாகம்மாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக 5 பெண்கள் கொண்ட கும்பல் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களில் மூவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் காய வைக்கும் பித்தளை அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை பட்டப்பகலிலேயே திருடிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில், நாகம்மாபுதூர் பகுதியில் சுற்றிய மூன்று பெண்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை திருடிச்செல்லும் வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களை பெண்கள் திருடிச்செல்வது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?