அன்னூர், நாகம்மாபுதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரியும் பெண்களின் தில்லாலங்கடி வேலை குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள ஏபிஜே நகர், நாகம்மாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக 5 பெண்கள் கொண்ட கும்பல் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்துள்ளனர். இவர்களில் மூவர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத சமயங்களில் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் காய வைக்கும் பித்தளை அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை பட்டப்பகலிலேயே திருடிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில், நாகம்மாபுதூர் பகுதியில் சுற்றிய மூன்று பெண்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா உள்ளிட்ட பாத்திரங்களை திருடிச்செல்லும் வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களை பெண்கள் திருடிச்செல்வது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.