நாதகவின் சேலம் மாநகர் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.
சேலம்: நாம் தமிழர் கட்சியில் வீரத்தமிழர் முன்னணி என்ற பிரிவு உள்ளது. இந்த நிலையில், நாதகவின் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் சேலம் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அதேநேரம், தலைவரின் (சீமான்) வழியில் தமிழ் தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும் எனவும் வைரம் குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, சேலத்திலும் அதன் நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம் என்ற தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று (நவ.19) தனது முகநூலில் தெரிவித்து விட்டு விலகிச் சென்றார். இன்று அதே சேலம் மாநகர் மாவட்ட அளவில் வேறு ஒரு அணியின் முக்கிய நிர்வாகி விலகியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலப் பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டலப் பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த அக்டோபரில் விலகினர். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் கூண்டோடு கம்பி நீட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கஸ்தூரி மாதிரி ஜெயிலுக்கு போக ரெடியா இரு… எச்சரிக்கும் பயில்வான் ரங்கநாதன்!
இவ்வாறு அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நாதக நிர்வாகிகள் கூறுகையில், “நாங்கள் பல வருடமாக கட்சியில் இருக்கிறோம். ஆனால், எங்களை அவர் (சீமான்) கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் பேச விடுவதில்லை. எங்களுக்கான மரியாதை கிடைப்பதில்லை” என ஆதங்கத்தைக் கொட்டுகின்றனர்.
மேலும், இவ்வாறு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், விஜயை சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் நினைவுகூரத்தக்கது.
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
This website uses cookies.