தஞ்சை : தஞ்சை அருகே தனியார் பள்ளி ஆசிரியர் சக மாணவர்கள் முன் பிளஸ்-2 மாணவியை தகாத வார்த்தைகளை கூறி திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையை அடுத்துள்ள பருத்தியப்பர் கோயில் பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் கருணாநிதி என்பவரின் 17 வயது மகள் ஒரத்தநாடு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மாணவியை பள்ளியின் கணித ஆசிரியர் சசிகுமார் என்பவர் சக மாணவர்கள் முன் தகாத வார்த்தைகளை கூறி திட்டியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வதாக தன்னுடன் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு வாட்ஸ்- அப் மூலம் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் சசிகுமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.