குமரி : கன்னியாகுமரி இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தராக பணியாற்றும் சார்பதிவாளர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்து, அந்த நாளில் மாவட்ட பதிவாளர்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களை பொறுப்பு சார்பதிவாளர்களாக நியமித்து லஞ்சம் பெற்றுகொண்டு முறைகேடாக ஆவணங்கள் பதிவு செய்து வருவதாக தொடர் குற்றசாட்டுகள் எழுந்தது.
இது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் பத்திரபதிவு துறை டிஐஜி ஆகியோருக்கு புகார் அனுப்பி வந்த நிலையில், பொறுப்பு சார்பதிவாளர் பத்திரபதிவு செய்வதாகவும், தொடர்த்து பதிவுக்கான ஆன்பதிவு டோக்கன்களை நிறுத்தி வைத்துவிட்டு பொதுமக்கள் பத்திரபதிவு செய்யமுடியாத நிலையில் அந்த டோக்கன்களை அதிகாரிகளே தங்களுக்கு வேண்டிய ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு வழங்கி முறைகேடாக பத்திரபதிவுசெய்து வருவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாலையில் திடீரென மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையாவிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 4,52,800 மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சுவாமிதோப்பு அருகே விஜயநகரி பகுதியை சேர்ந்த பொறுப்பு சார்பதிவாளர் சுப்பையா, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 4 பேர் மற்றும் இடைதரகர்கள் 6 பேர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.