பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரும் தென் தமிழகத்தை சேர்ந்த பிரபல ரவுடியாக அறியப்படுபவருமான ராக்கெட் ராஜா இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார் தொடர்ந்து அவர் தனது வழக்கறிஞர்களுடன் மொத்தம் மூன்று வழக்குகளில் நீதிபதிகள் முன்பு ஆஜராகினார்.
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
மேலும் படிக்க: தெருநாய்கள் கடித்து குதறி கவ்வி இழுத்து சென்ற சம்பவம்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி!
தொடர்ந்து அந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார் மேலும் 2018 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அதேபோல் தாழையூத்தில் 2018ஆம் ஆண்டு பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜா மாவட்ட முதன்மை நீதிபதி முன்பு ஆஜராகினார்.
அந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது அதை தொடர்ந்து ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.
பிரபல ரவுடியாக அறியப்படும் ராக்கெட் ராஜா ஒரே நாளில் இரண்டு கொலை வழக்குகள் உட்பட மூன்று வழக்குகளில் ஆஜரான சம்பவம் நிலையில் பரபரப்பு ஏற்படுத்தியது
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ வெளியாகி கடந்த ஒரு வாரமாகவே டிரெண்டிங்கில் உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
நடிகை சுகன்யா புது நெல்லு புது நாத்து படம் மூலம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த…
This website uses cookies.