வெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் சேதமா? இலவசமாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு.. உயர்கல்வித்துறை அறிவிப்பு!!
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பெருமளவு பாதித்துள்ளன. வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பல்வேறு மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள் நீரில் மூழ்கின.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்ட்டனர். ஏனென்றால், அந்த ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களின் நகலை பெறுவதற்கு சாதாரண நாட்களில் மிகுந்த சிரமமாக இருக்கும்.
அதனை எளிமைப்படுத்த உயர்கல்வித்துறை முக்கிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதன்படி, மழை வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் mycertificates.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வவேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட மாணவர்கள், மழை வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ் விவகாரங்களை அதில் அளித்து, ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கொண்டு அந்தந்த மாவட்ட கல்வி நிலையங்கள் (பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்கள்) வாயிலாக சான்றிதழ் நகல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
This website uses cookies.