மாமன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர் ஆகியோருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அசோக்குமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 60 வார்டுகளை சேர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதில் மொத்தம் 225 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல் தீர்மானமாக தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மாநகராட்சி அலுவலக மைய பகுதியில் மார்பளவு வெண்கல சிலை அமைப்பது, மாநகர் முழுவதும் 5 கோடியில் 400 LED விளக்குகள் அமைப்பது சாலைகள் சிறமைப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தங்கள் வார்டுகளில் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்றும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையம் இன்னமும் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் கூச்சல் நிலவியது.
அதே போல் தனக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தனது கேள்விக்கு மேயர் உரிய பதில் அளிக்கவில்லை என ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா கேள்வி எழுப்பியதால் மேயர், துணை மேயர், ஒன்றாவது மண்டல குழு தலைவர் என 3 திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.