குமரி அருகே அரிகொம்பன் யானையின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வரும் நிலையில், கேரளாவை சேர்ந்த அரிசி கொம்பன் யானை ஃபேன்ஸை சேர்ந்தவர்கள் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிக்கொம்பன் யானை உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் பரவி வருகின்றன. யானையின் உடல் மெலிந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வருகிறது,மேலும் தினசரி யானை குறித்த வெவ்வேறு விதமான தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற சமூக ஆர்வலர் தலைமையில் அரி கொம்பன், ஃபேன்ஸ் அமைப்பு என்ற பெயரில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- அரிகொம்பன் யானை குறித்து சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் மிகவும் வேதனை அடைகிறோம். யானை மிகவும் உடல் மெலிந்து ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது, எனவே குமரி மாவட்ட நிர்வாகமும்,தமிழக அரசும் அரி கொம்ப யானை குறித்து சரியான தகவலை தர வேண்டும் என மனு அளித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.