அரியலூர் அருகே மனைவியிடம் தகராறு செய்த தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கு திருமணமாகி ரதிஅழகி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவர் சமயபுரத்தில் உள்ள அலுமினிய கம்பெனியில் வேலை செய்து வருகிறார். முருகானந்தத்திற்கு ரமேஷ் என்ற தம்பி உள்ளார். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். தனது அண்ணனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முருகானந்தம் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த தனது அண்ணி ரவி அழகியிடம் தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை சரிசமமாகப் பிரித்துக் கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். மேலும் தன்னையும் குழந்தைகளையும் ரமேஷ் அடித்து துன்புறுத்துவதாக, தனது கணவர் முருகானந்தத்திற்கு ரதி அழகி போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
வீட்டிற்கு வந்த முருகானந்தத்திற்கும் ரமேஷ் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் வாசலில் இருந்த உலக்கையால் ரமேஷை தாக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து முருகானந்தத்தின் சகோதரி முத்தமிழ் செல்வி கீழப்பலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகானந்தத்தை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பூண்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.