திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோவில் அருகே இந்து சங்கம
வேல்யாத்திரை குழு சார்பில் 108 வேல் பூஜை விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆருத்ரா ஊழல் என சொல்கிறார்கள். அண்ணாமலை எந்த அரசு பதவியிலும் இல்லை அவரை இழிவுபடுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.
மான நஷ்ட ஈடு வழக்கு போடுவதாக தெரிவிக்கின்றனர். போடட்டும் அவர்கள் முறையாக பதில் சொல்ல வேண்டும் என்றும் பாஜகவின் லஞ்ச ஊழல் ஒழிப்பு அரசியலை அண்ணாமலை தமிழகத்தில் முன்னெடுக்கிறார்
என்றும் சிபிஐயில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்திலும் ஊழலை அம்பலப்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டுள்ளார். அதற்கு முழு ஆதரவை இந்து மக்கள் கட்சி சார்பில் தெரிவிப்போம்.
தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக , அதிமுக கட்சியினர் செய்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களை காப்பதற்கான லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான ஒரு யுத்தம் அதிமுக திமுக என வித்தியாசம் கிடையாது என்று கூறினார்.
மேலும் கனிமொழி 800 கோடி உதயநிதி 2000 கோடி சொத்து உள்ளதாக
அண்ணாமலை கூறியது குறைவு என அனைவரும் சொல்வதாகவும்
அண்ணாமலை சட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் இந்து மக்கள் கட்சி அவருக்கு துணையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்..
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.