Categories: தமிழகம்

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியிடம் ஆஜரான ஆயுதப்படை பயிற்சி காவலர் . விசிக திடீர் எதிர்ப்பு : போலீசார் குவிப்பு!

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா இன்று சிபிசிஐடி விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள சி பி சி ஐ டி அலுவலகத்தில்

வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே 189 நபர்களிடம் விசாரணை செய்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்

மேலும் 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை எடுத்ததில் குடிநீர் மாதிரி சோதனை முடிவோடு டி என் ஏ ஒத்துப் போகாததால் சிபிஎஸ்சி டி போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சி பி சி ஐ டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதற்கிடையில் அதே ஊரைச் சேர்ந்த புதுக்கோட்டை ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவின் செல்போன் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு முரளி ராஜாவிடம் குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.

அதேபோன்று அந்த செல்போன் பதிவை ஆதாரத்தை கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று நபர்களிடம் சென்னையில் உள்ள குரல் மாதிரி பரிசோதனை மையத்தில் சிபிசிஐ போலீசார் குரல் மாதிரி பரிசோதனை எடுத்துள்ளனர்

இதற்கிடையில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவை இன்று நிஜாம் காலனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகமாறு சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்றுஅவர் புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக தனது வழக்கறிஞருடன் ஆஜரானார்.

இந்த நிலையில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் இதர சமூக வலைதளங்களில் அவர்கள் சார்பாக ஒரு பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டு உலா வருகின்றது.

அதில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவை குற்றவாளியாக ஆக்க முயற்சித்து பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக ஆக்க சிபிசிஐடி போலீசார் முயற்சி செய்கின்றனர். இதனை நாம் முறியடிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்களை பதிவிட்டு உள்ளதோடு நாளை காலை நாம் 10 மணிக்கு அனைவரும் முரளி ராஜாவிற்காக ஒன்று கூட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது

விடுதலை சிறுத்தைகளின் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையால் நகரம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: கோவிலில் திருட்டு போன நகை.. ஒரு வாரம் கழித்து அதே இடத்தில் வைத்து சென்ற திருடர்களால் பரபரப்பு!

இந்நிலையில் இன்றைய காலை 10 மணி அளவில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜா சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். சி பி சி ஐ டி போலீசார் காவலர் முரளி ராஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

3 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

4 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

4 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

4 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

5 hours ago

This website uses cookies.