திருவள்ளூர் : கவரைபேட்டை அருகே சினிமா சூட்டிங்கின் போது 30 அடி உயரத்தில் இருந்து லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்த சோகம் படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை அருகேயுள்ள ஐயர் கண்டிகை கிராமத்தில்
திரைப்பட இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு சொந்தமான பிலிம்சிட்டி ஸ்டுடியோவில் நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் வெப்பன் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, ஒலிப்பதிவு அரங்கத்தில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குமார் (47) என்பவர் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார். அங்கு திரைப்படத்திற்காக நடைபெற்ற பணியின் போது, சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில், பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த கவரைபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திரைப்பட நடிகர் சத்தியராஜ் நடிக்கும் வெப்பன் திரைப்படத்திற்கான பணியின் போது லைட்மேன் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து தொடர்பாக அங்கு அவருடன் பணியில் இருந்த ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.