இறுதி அஞ்சலிக்காக இரவோடு இரவாக நடக்கும் ஏற்பாடு.. விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!
மறைந்த விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலி செலுத்த ஏராளமான பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், இட நெருக்கடி காரணமாக, அதிகமானோர் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் உள்ளதன் காரணமாகவும், மேலும் ஏராளமானோர் விஜயகாந்த் உடலை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக வருகை தருவதன் காரணமாகவும், பாதுகாப்பு கருதி, சென்னை தீவுத் திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை வைக்கப்படுகிறது.
விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக விஜயகாந்த் உடல் வைக்கப்படவுள்ள தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை அதிகாலையில் கோயம்பேட்டில் இருந்து விஜயகாந்த்தின் உடல் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…
ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…
பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் நாகர் மைதானத்தில் இன்று தமிழக முதல்வரின் 72வது பிறந்தநாள் விழா மற்றும் திராவிட மாடல்…
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
This website uses cookies.