Categories: தமிழகம்

பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்: வம்பிழுத்து இரும்பு கம்பியால் தாக்கிய கும்பல் கைது!!

கோவை: பொது இடத்தில் சிறுநீர் கழித்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை ஆவாரம்பாளையம் கந்தவேல் நகரை சேர்ந்தவர் பாலசந்திரன் பெயிண்டர். இவர் நேற்று ரத்தினபுரி 7வது தெருவில் உள்ள பாலத்தின் அருகே சிறுநீர் கழித்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 4 பேர் ஏன் இந்த இடத்தை அசுத்தம் செய்கிறாய்? என கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பாலசந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இதில், காயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து ரத்தினபுரி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.

இதில், தாக்குதல் நடத்தியது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கராஜ் , தென்காசி பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆனந்த், தென்காசி சுரண்டையை சேர்ந்த சரவணன், உடுமலையை சேர்ந்த பூபதி என்பது தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் கோவையில் வாழை இலை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேர் மீதும் தாக்குதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!

60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…

4 hours ago

கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…

4 hours ago

“WHAT BRO”நான் குல்லா போடுற ஆள் இல்லை..மேடையில் விஜயை தாக்கிய பிரபலம்.!

வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…

5 hours ago

மருமகள், பேத்தியையும் விட்டுவைக்கவில்லை.. மாமியாருடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்!

கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

6 hours ago

சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!

தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…

6 hours ago

எங்களுக்கு எந்த நிலத்தகராறும் இல்லை.. பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த செளந்தர்யா கணவர்!

சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…

7 hours ago

This website uses cookies.