கோவை: பொது இடத்தில் சிறுநீர் கழித்தவரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை ஆவாரம்பாளையம் கந்தவேல் நகரை சேர்ந்தவர் பாலசந்திரன் பெயிண்டர். இவர் நேற்று ரத்தினபுரி 7வது தெருவில் உள்ள பாலத்தின் அருகே சிறுநீர் கழித்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 4 பேர் ஏன் இந்த இடத்தை அசுத்தம் செய்கிறாய்? என கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி பாலசந்திரனை இரும்பு கம்பியால் தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
இதில், காயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து ரத்தினபுரி போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதில், தாக்குதல் நடத்தியது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கராஜ் , தென்காசி பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆனந்த், தென்காசி சுரண்டையை சேர்ந்த சரவணன், உடுமலையை சேர்ந்த பூபதி என்பது தெரியவந்தது.
இவர்கள் 4 பேரும் கோவையில் வாழை இலை வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேர் மீதும் தாக்குதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஹாரிஸ் மாமா 90ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹாரிஸ் ஜெயராஜ், 2000களில் கோலிவுட்டின் இசை உலகில்…
ஐபிஎல் போட்டியில் நேற்று வெகு நாள் கழித்து சென்னை அணி வெற்றியை ருசிபார்த்தது. நேற்று சென்னை அணி லக்னோ அணியுடன்…
இடுப்பழகி சிம்ரன் 90ஸ் கிட்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வருபவர் சிம்ரன். இந்த 49 வயதிலும் அவர் இளமையாகவே இருக்கிறார்.…
திமுகவினர் தூண்டுதலில் பாஜக பற்றி தவறான தகவலை பரப்பி கோட்டாட்சியரை மிரட்டிய நபர் மீது மாநகர் காவல் ஆணையரிடம் புகார்…
தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரை வைத்து ஆரம்ப காலக்கட்டத்தில் ஏராளமான படங்களை இயக்கினர்.…
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
This website uses cookies.