கோவை: உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு பணம் விநியோகம் வெளிப்படையாகவே நடைபெறுவதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் வந்த ஐந்து பேர் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ” இதுவரை இல்லாத வகையில் தற்போது ஓட்டுக்கு பணம் கொடுப்பது வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது. இது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி தரவில்லை. நீதிமன்றம் சென்று அதற்கான உத்தரவை பெற்று வந்ததற்கு பின்பு கூட அனுமதி கடிதம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
அதற்குள் தேர்தல் பிரச்சாரமே முடிந்துவிடும். தேர்தலை முறையாக நடத்தும் பொறுப்புள்ள மாநில தேர்தல் ஆணையமே முறைகேட்டிற்கு துணை நிற்கிறது. எனவே நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்.” என்றனர்.
தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தேர்தலுக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.