தமிழகம்

நாங்கள் மட்டும் என்ன? மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தின் மறுபக்கம்!

மருத்துவருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா என கைதான நபரின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக இருந்த பாலாஜி என்பவரை, திடீரென ஒரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலும் வழங்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இச்சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரிவர அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஸ்வரன் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். எனவே, இச்சம்பவத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைதான விக்னேஸ்வரனின் தாயார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “என்னுடைய மகன் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை” எனக் கண்ணீரோடு தெரிவித்து உள்ளார்.

மேலும், இது குறித்து விக்னேஸ்வரனின் உறவினர்கள் கூறுகையில், “எங்களிடம் எதுவும் சொல்லாமலே இந்த தவறை விக்னேஷ் செய்துள்ளார். மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்துவிட்டது என்று அவருக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள், ஆனால், அதே மருத்துவரால் தான் இங்கே ஒரு உயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை ஏன் யாரும் பேச முன்வரவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் சோதனையில் லாட்டரி மார்ட்டின்.. விசிக பிரமுகர் வீட்டிலும் சோதனை!

அது மட்டுமல்லாமல், “மருத்துவருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா? அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு எதற்காக? நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும் என்பதற்காகத்தான்.. ஆனால், அவர் (மருத்துவர்) செலுத்திய ஊசி நுரையீரலைப் பாதித்தது. அதை ஏன் எங்களிடம் நீங்கள் கூறவில்லை? அதன் பிறகும், அந்த ஊசி தொடர்ந்து செலுத்தப்பட்டது. அதை ஏன் நீங்கள் நிறுத்தவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

4 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

6 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

7 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

8 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

8 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

9 hours ago

This website uses cookies.