தமிழகம்

நாங்கள் மட்டும் என்ன? மருத்துவர் கத்திக்குத்து விவகாரத்தின் மறுபக்கம்!

மருத்துவருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா என கைதான நபரின் உறவினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் மருத்துவராக இருந்த பாலாஜி என்பவரை, திடீரென ஒரு இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலும் வழங்கப்பட்டு உள்ளது.

அதேநேரம், தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இச்சம்பவத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரிவர அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கவில்லை என்பதால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர் விக்னேஸ்வரன் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். எனவே, இச்சம்பவத்திற்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைதான விக்னேஸ்வரனின் தாயார் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “என்னுடைய மகன் இப்படி செய்வான் என்று நினைக்கவில்லை” எனக் கண்ணீரோடு தெரிவித்து உள்ளார்.

மேலும், இது குறித்து விக்னேஸ்வரனின் உறவினர்கள் கூறுகையில், “எங்களிடம் எதுவும் சொல்லாமலே இந்த தவறை விக்னேஷ் செய்துள்ளார். மருத்துவருக்கு கத்திக்குத்து நடந்துவிட்டது என்று அவருக்கு சிகிச்சை அளிக்கிறீர்கள், ஆனால், அதே மருத்துவரால் தான் இங்கே ஒரு உயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. அதை ஏன் யாரும் பேச முன்வரவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் சோதனையில் லாட்டரி மார்ட்டின்.. விசிக பிரமுகர் வீட்டிலும் சோதனை!

அது மட்டுமல்லாமல், “மருத்துவருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா? அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு எதற்காக? நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும் என்பதற்காகத்தான்.. ஆனால், அவர் (மருத்துவர்) செலுத்திய ஊசி நுரையீரலைப் பாதித்தது. அதை ஏன் எங்களிடம் நீங்கள் கூறவில்லை? அதன் பிறகும், அந்த ஊசி தொடர்ந்து செலுத்தப்பட்டது. அதை ஏன் நீங்கள் நிறுத்தவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

Hariharasudhan R

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

17 minutes ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

1 hour ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

2 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

2 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

2 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

3 hours ago

This website uses cookies.