வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் இணைந்த அரவிந்த்சாமி
அரவிந்த் சாமி.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் யானிக் பெண் பணியாற்றி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் புதிய தெலுங்கு படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை-28 திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த வெங்கட் பிரபு, சமீபத்தில் மாநாடு, மன்மத லீலை உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.
தமிழில் பிசியாக திரைப்படங்களை இயக்கி வந்த வெங்கட் பிரபு, தற்போது தெலுங்கில் முதன்முறையாக புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்து வருகின்றனர். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் யானிக் பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லையாம். அவருக்கு பதிலாக பிரபல நடிகர் அரவிந்த்சாமி இப்படத்தில் வில்லனாக இணைந்துள்ளாராம்.
மேலும், அரவிந்த்சாமி ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி திரைப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். தற்போது கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைய இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.