Categories: தமிழகம்

பிரியாணிக்கு பில் கட்டாமல் கத்தியை காட்டி மிரட்டி அராஜகம் : பிரபல ரவுடிகள் கைது

சென்னை : கொளத்தூர் அருகே பிரியாணி கடை மேலாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பிரபல ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் மூகாம்பிகை பஸ் நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த தயாநிதி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது உணவகத்திற்கு பிரியாணி சாப்பிட , சென்னை அடுத்த செங்குன்றம் சோலையம்மன் நகரைச் சேர்ந்த குமார் என்கிற வாட்டர் வாஷ் குமார்(31) என்பவரும் பாடியில் உள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த கோபிநாத் (25) ஆகிய இருவரும் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் மேலாளர் தயாநிதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாங்கள் ரவுடிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா…? என கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் 1500 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து இருவரும் தப்பித்து ஓடினர். மேலும் கடையில் உள்ள டிவி அலங்கார பொருட்களையும் கத்தியால் அடித்து உடைத்து நாசப்படுத்தினர். இச்சம்பவத்தை உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் பார்த்து அங்கிருந்து பதறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது சம்பந்தமான சி.சி.டி.வி கண்காணிப்பு பதிவு உள்ளதையும் வைத்து உணவக மேலாளர் தயாநிதி கொளத்தூர் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட கொளத்தூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு தெரிப்படுத்தியதில் உடனடியாக போலீசார் களத்தில் இறங்கி செங்குன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்கின்ற வாட்டர் வாஷ்குமார் மற்றும் பாடி கோபிநாத் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில்,
இவர்கள் இருவரின் மீதும் சென்னை மற்றும் புறநகரில் உள்ள காவல் நிலையில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!

படத்தை கைவிட லைக்கா நிறுவனம் முடிவு நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய முழு கவனத்தையும் அரசியல்…

2 hours ago

விஜய் படத்துக்கு 150 டைட்டிலா..அந்த ஒரு பாட்டுனால தப்பிச்சேன்..வெளிப்படையாக பேசிய இயக்குனர்.!

'திருப்பாச்சி' பட டைட்டிலின் சுவாரசியம் தமிழ் சினிமாவில் தற்போது படங்கள் கூட எடுத்திருலாம் போல,ஆனால் பட டைட்டில் வைப்பதில் மிகவும்…

3 hours ago

ரஜினிக்காக எடுத்த முடிவு…SK 23 படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் என்னனு தெரியுமா.!

ரஜினி பட டைட்டிலை யோசித்த படக்குழு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்,சமீபத்தில் இவருடைய…

4 hours ago

get out stalin என்று சொல்ல மக்கள் தயார் : ஒன்று சேர்ந்தால் வெற்றி.. பிரபல நடிகை கருத்து!

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். உதயநிதி மற்றும்…

4 hours ago

அட்லீயை அடித்து விரட்டும் பாலிவுட்? கமிட் ஆன படத்தில் இருந்து கழட்டி விட்ட சூப்பர் ஸ்டார்!

இயக்குநர் அட்லீ தமிழில் இயக்கிய படங்கள் அத்தனையும் ஹிட் அடித்தது. இதையடுத்து இடையில் எந்த படங்கைளையும் இயக்காத அவர் பாலிவுட்…

4 hours ago

மிஷ்கினை பற்றி உங்களுக்கு என்னங்க தெரியும்…நடிகர் சமுத்திரக்கனி ஆவேசம்.!

சினிமாவுக்காக உயிரை கொடுப்பவர் மிஸ்கின் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின்,படம் இயக்குவதை தாண்டி தற்போது பல படங்களில்…

5 hours ago

This website uses cookies.