திருச்சி : திருச்சி அருகே சொத்து தகராறில் உடன்பிறந்த அக்கா மற்றும் ஒரு வயதான அக்கா மகனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி, வாழவந்தான் கோட்டை அடுத்துள்ளது ஈச்சங்காடு. இப்பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு ஒரு வயதில் சாய்தேவ் என்ற மகன் உள்ளார். அவர் தங்கியிருக்கும் அதே வீட்டின் மாடி பகுதியில் அவரது தம்பி தனக்கோடி தங்கியிருக்கிறார்.
நேற்று தனக்கோடிக்கும், அவரது அக்காள் தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தனக்கோடி அக்காவை அரிவாளால் வெட்டியுள்ளார் இதைக்கண்டு ஓடிவந்த அவரது மகன் சாய்தேவ்வை, குழந்தை என பாராமல் அவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கினார்.
இது குறித்து தகவலறிந்த துவாக்குடி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த தனலட்சுமி மற்றும் சாய்தேவ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தம்பி தனுஷ்கோடியை கைது செய்து .விசாரணை மேற்கொண்டனர் முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.