திருச்சி : திருச்சி அருகே சொத்து தகராறில் உடன்பிறந்த அக்கா மற்றும் ஒரு வயதான அக்கா மகனை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துவாக்குடி, வாழவந்தான் கோட்டை அடுத்துள்ளது ஈச்சங்காடு. இப்பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு ஒரு வயதில் சாய்தேவ் என்ற மகன் உள்ளார். அவர் தங்கியிருக்கும் அதே வீட்டின் மாடி பகுதியில் அவரது தம்பி தனக்கோடி தங்கியிருக்கிறார்.
நேற்று தனக்கோடிக்கும், அவரது அக்காள் தனலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த தனக்கோடி அக்காவை அரிவாளால் வெட்டியுள்ளார் இதைக்கண்டு ஓடிவந்த அவரது மகன் சாய்தேவ்வை, குழந்தை என பாராமல் அவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கினார்.
இது குறித்து தகவலறிந்த துவாக்குடி காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், இருந்த தனலட்சுமி மற்றும் சாய்தேவ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தம்பி தனுஷ்கோடியை கைது செய்து .விசாரணை மேற்கொண்டனர் முதற்கட்ட விசாரணையில் சொத்து பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.