திருச்சி : உதவி செயற் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 31 லட்சம் கைப்பற்றிய நிலையில் மற்றொரு உதவிப்பொறியாளரும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுனர்.
இந்த சோதனையின் போது உதவி பொறியாளர் கந்தசாமியிடம் கணக்கில் வராத சுமார் 31 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பணி செய்யும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் உதவி செயற்பொறியாளர் கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் உள்ள கந்தசாமி வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு உதவி செயற்பொறியாளரான மணிகுமார் என்பவர் வீட்டில் சோதனை போது ரூபாய் 4 லட்சம் கைப்பற்றதாக கூறப்படுகிறது. அவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு உதவி செயற் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு தொழில் சிக்கியது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.