தமிழ் சினிமாவின் முன்னணி கமெர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைந்துள்ள அட்லீ, ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்குவதன் மூலம் பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதிய இருக்கிறார். ஜவான் படம் ஷாருக்கானுக்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீ எப்படி இயக்கியிருக்கிறார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.
ஏன் தெரியுமா, அட்லீ இயக்கத்திலான அனைத்து படங்களுமே ஏற்கெனவே தமிழில் வந்த படங்களின் சாயல், கதையம்சத்தோடு தொடர்புடையதாக இருக்கும் என்ற கருத்து உண்டு. அந்த வகையில் ஷாருக்கானின் ஜவானில் எந்த மாதிரியான கதையம்சத்தை அட்லீ வைத்திருப்பார் என்றும் நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜவான் படத்தில் ஷாருக்கான் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் அப்பாவாக வரும் ஷாருக் ராணுவ அதிகாரியாகவும், அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல மகனாக வரும் ஷாருக்கானுக்குதான் நயன்தாரா ஜோடியாக நடிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜவான் படத்தின் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது என கூறப்படுகிறது.
இப்படி இருக்கையில், படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரத்தை இறக்கவைக்கும் காட்சிகள் அட்லீயின் கதையில் எப்போதும் இடம்பெற்றிருக்கும். அதன்படி ராஜா ராணியில் நஸ்ரியா, தெறியில் சமந்தா, ராதிகா, மெர்சலில் அப்பா விஜய், நித்யா மேனன் மற்றும் பிகிலில் ராயப்பனாக வந்த விஜய் ஆகிய கேரக்டர்கள் கொல்லப்பட்டிருக்கும். இதேபோல ஜவானிலும் அப்பா கேரக்டரில் வரும் ஷாருக் அல்லது தீபிகா படுகோன் இருவரில் யார் இறப்பார்கள் என்ற கேள்வி கோலிவுட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும் தற்போது வெளியான தகவலை வைத்து, தமிழில் விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தின் சாயல் ஷாருக்கானின் ஜவான் படத்தில் இருப்பது போல உள்ளது என பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.