வேலூர் : ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி தொடர்ந்து பணத்தை திருடி வந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள EB அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காவலர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு, எதையோ தூக்கி வீசியுள்ளார்.
சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் வீசியது ஏடிம் கார்டுகள் என்றும் தெரியவந்தது.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், கைதான நபர் வடுங்கன்தாங்கள் பில்லாந்திப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழில் செய்யும் சுரேஷ்(36) என்றும், இவர் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை (எடுக்க தெரியாத நபர்களை) ஏமாற்றி போலியான மற்றும் காலாவதியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு நூதன முறையில் அவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டு மூலம் பணத்தை தொடர்ந்து திருடி வந்ததாகவும், சித்தூர் பகுதியில் அதிக அளவில் இது போன்ற திருட்டில் ஈடுபட்டதாகவும், வேலூர், காட்பாடி, பாகயம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளிலும் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக கூறினர்.
இதனையடுத்து, கைதான சுரேஷிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 ஏடிஎம் கார்டுகள், 35 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் வேலூர் ஜெஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
This website uses cookies.