திண்டுக்கல் : பழனி அருகே ஜோதிடத்தில் நேரம் சரியில்லை என்று கூறி 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு 3வயதில் ஆண்குழந்தையும், பிறந்து 4 மாதமே ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நேற்று தந்தை மகேஷ்வரன் வேலைக்கு சென்ற நேரத்தில், குழந்தைகளுடன் வீட்டில் இருந்த தாய் லதா 4மாத கைக்குழந்தை கோகுலை வீட்டில் படுக்கவைத்து விட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை கோகுலை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் லதா அக்கம்பக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியுள்ளனர். அப்போது அருகில் உள்ள பாலாறு பொருந்தலாறு ஆற்றின் கரையில் அமலைச்செடிகளுக்கு நடுவே குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துவந்தனர். மருத்துவர்களும் சோதனை செய்து குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் தாய், தந்தையிடம் விசாரணை செய்தனர்.
தாய் லதா முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், தாயிடம் நடத்திய விசாரணையில் தாய் லதா தனக்கு மனக்கஷ்டம் மற்றும் உடல்நிலை சரியில்லை மற்றும் ஜாதகத்தில் இரண்டாவது குழந்தையால் நேரம் சரியில்லை என்று கூறியதால் தனது மகனை ஆற்றில் தூக்கி வீசி கொண்டதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர் தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.