Categories: தமிழகம்

ஜோதிடத்தில் நேரம் சரியில்லை… 4 மாத குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கொடூரம் : நாடகமாடிய தாய் கைது!!

திண்டுக்கல் : பழனி அருகே ஜோதிடத்தில் நேரம் சரியில்லை என்று கூறி 4 மாத ஆண் குழந்தையை ஆற்றில் தூக்கி வீசி கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது ராஜாபுரம் ஊராட்சி. இங்குள்ள 2வது வார்டில் வசித்து வருபவர் மகேஷ்வரன்-லதா தம்பதி. இவர்களுக்கு 3வயதில் ஆண்குழந்தையும், பிறந்து 4 மாதமே ஆன கோகுல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நேற்று தந்தை மகேஷ்வரன் வேலைக்கு சென்ற நேரத்தில், குழந்தைகளுடன் வீட்டில் இருந்த தாய் லதா 4மாத கைக்குழந்தை கோகுலை வீட்டில் படுக்கவைத்து விட்டு கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது குழந்தை கோகுலை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் லதா அக்கம்பக்கத்தில் உறவினர்களுடன் சேர்ந்து குழந்தையை தேடியுள்ளனர். அப்போது அருகில் உள்ள பாலாறு பொருந்தலாறு ஆற்றின்‌ கரையில் அமலைச்செடிகளுக்கு நடுவே குழந்தை சடலமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து உடனடியாக குழந்தையை பழனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துவந்தனர். மருத்துவர்களும் சோதனை செய்து குழந்தை இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பழனி தாலுகா போலீசார் குழந்தையின் தாய், தந்தையிடம் விசாரணை செய்தனர்.

தாய் லதா முன்னுக்குப்பின் முரணாக போலீசாரிடம் பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், தாயிடம் நடத்திய விசாரணையில் தாய் லதா தனக்கு மனக்கஷ்டம் மற்றும் உடல்நிலை சரியில்லை மற்றும் ஜாதகத்தில் இரண்டாவது குழந்தையால் நேரம் சரியில்லை என்று கூறியதால் தனது மகனை ஆற்றில் தூக்கி வீசி கொண்டதாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் பழனி தாலுகா காவல் துறையினர் தாய் லதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

10 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

10 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

11 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

11 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

12 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

12 hours ago

This website uses cookies.