புதுச்சேரி : வயதான தம்பதியினரை பாஜக பிரமுகர் கூட்டாளிகளுடன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மனைவுயுடன் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன்(வயது 65). இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் செய்து வந்த தொழிலில் நஷ்டம் அடைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவர் கருவடிக்குப்பத்தில் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை அவ்வப்போது பிரகாஷ் கேட்டு வந்துள்ளார். ஆனால் பணம் இல்லாத காரணத்தினால் குமரேசன் அவகாசம் கோரி வந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குமார் உட்பட 3 பேர் கடைக்கு சென்று குமரேசனை மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர்களை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து, பா.ஜ.க பிரமுகர் தம்பதியினரை தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, மேலும் இது குறித்து லாஸ்பேட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.