Categories: தமிழகம்

வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் : மாநகர காவல் துணை ஆணையரிடம் பாஜக புகார்…

நெல்லை : நெல்லையில் வாக்குச்சாவடியில் பாஜக பெண் வேட்பாளரை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் மாநகர காவல் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. நெல்லை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட வாக்குச்சாவடி நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள மந்திரமூர்த்தி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது 8க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் ஒரே மையத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த வாக்குச்சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளது உதவி ஆய்வாளர் தலைமையில் வாக்குச் சாவடியை சுற்றி போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 5 மணியுடன் பொதுமக்கள் வாக்குப்பதிவு செய்யும் நேரம் நிறைவு பெற்ற நிலையில் மீதம் உள்ள ஒரு மணி நேரம் கொரனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி வார்டு 26 குட்பட்ட வாக்குச்சாவடி எண் 148ல் வாக்குச்சாவடி முகவர் ஒருவர் புதிதாக வந்ததாக கூறப்படுகிறது. அந்த முகவரை தடுத்து நிறுத்த பாஜக வேட்பாளர் மாரியம்மாள் என்பவர் முயற்சி செய்ததாகவும், அப்போது வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக வேட்பாளர் தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் மாரியம்மாள் வாக்குச்சாவடி மையத்தில் உற்ற உயரமான மேடையில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது. திமுக பிரமுகர் தாக்கி தள்ளி விட்டதாலேயே அவர் காயமடைந்ததாக பாஜக முகவர்கள் மற்றும் கட்சியினர் குற்றம் சாட்டி, வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும்காயமடைந்த மாரியம்மாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து பாஜக நிர்வாகிகள் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் சுரேஷ்குமாரிடம் வேட்பாளரை தாக்கிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்த சூழலில் போலீசார் திமுக பிரமுகர் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாக்குச்சாவடி அதிகாரிகள் அங்கிருந்த முகவர்கள் உள்ளிட்ட அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

KavinKumar

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

11 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

12 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

14 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

15 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

15 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

16 hours ago

This website uses cookies.