Categories: தமிழகம்

முன் விரோதத்தில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் : 3 பேர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் பத்திரிக்கையாளரை தாக்கிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி முருகம்பாக்கம் ரங்கசாமி நகர் பத்திரிக்கையாளர் காலனியை சேர்ந்தவர் உதயநாராயணன் (56) நமது முரசு நாளிதழின் நிறுவனர், இவர் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் சட்டசபையில் இருந்து வீட்டிற்கு என்.ஆர்.நகர் வழியாக சென்று கொண்டிருந்த போது அவரை தொடர்ந்து பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உதயநாராயணனின் வாகனத்தின் மீது மோதி அவரை கையால் தாக்கி, காலால் எட்டி உதைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் உதயநாராயணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் தேங்காய்தி்ட்டை சேர்ந்த சதீஷ் (எ) சௌந்தரராஜன், கார்த்தி என்பது தெரியவந்தது, தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரோடியர்பேட்டை சேர்ந்த அம்மா ஆறுமுகம் மற்றும் அவரது மைத்துனரும் பிரபல ரவுடியுமான அந்தோணி ஆகியோர் கூறியதன் பேரில் உதய நாராயணனை தாக்கியதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அம்மா ஆறுமுகத்தை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், 3 மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலை உதயநாராயணன் நடத்தினார்.

உதயநாராயணனுக்கும், ஆறுமுகத்தின் அண்ணன் மதிமகராஜாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதிமகராஜா, ஆறுமுகம் ஆகியோர் மீது பெரியக்கடை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தனது மச்சான் அந்தோனியிடம் கூறியதாகவும், அவர் சதீஷ், கார்த்தியை விட்டு உதய நாராயனனை தாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஆறுமுகத்தின் மைத்துனர் அந்தோனியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

KavinKumar

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

11 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

11 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

12 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

13 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

14 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

16 hours ago

This website uses cookies.