Categories: தமிழகம்

சட்டவிரோத கல்குவாரி குறித்து புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!!

திண்டுக்கல் : நத்தத்தில் கல்குவாரி நடத்தும் நபர்களால் நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவசங்கரன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்றுவட்டார பகுதிகளான சிறுகுடி, செந்துறை, தேத்தாம்பட்டி, பண்ணியா மலை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இங்கிருந்து பல்வேறு மதுரை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஜல்லி, எம்சாண்ட், பிசாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் லாரிகளில் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

இவற்றில் பல்வேறு கல்குவாரிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் அனுமதி இல்லாத வெள்ளை கற்களை லாரிகளில் கடத்திச் செல்வதாகவும் கூறி நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன் தலைமையில் அக்கட்சியினர் பல்வேறு வாகனங்களை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு நத்தத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி அனுமதியின்றி வெள்ளைக்கற்களை ஏற்றி சென்ற சிறுகுடி பகுதியை சேர்ந்த கல்குவாரிக்கு சொந்தமான வாகனத்தை நத்தம் காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்தார்.

இது தொடர்பாக கல் குவாரி நடத்துபவர்களுக்கும் சிவசங்கரனுக்கும் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில்
நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிவசங்கரன்
அவர்களுக்கு சொந்தமான நத்தம் செந்துறை ரோட்டில் உள்ள வீட்டுக்கு வந்த பண்ணியாமலையில் கல்குவாரி நடத்தி வரும் இ. ஆர்.எஸ் சின்னையா மற்றும் ராஜா என்ற இரண்டு நபர்கள் சிவசங்கரன் வீட்டிற்கு சென்று கல்குவாரிகளின் தொடர்பாக போராட்டங்கள் நடத்துவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது கைகலப்பில் முடிந்துள்ளது.

தொடர்ந்து ராஜா என்பவர் சிவசங்கரனை கூர்மையான கம்பி போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து முகம்,கை, கால்களில் காயமடைந்த சிவசங்கரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இத்த தாக்குதல் தொடர்பாக ராஜா என்பவரை நத்தம் காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெறுப்பேற்ற கள்ளக்காதல் நாடகம்.. கணவரின் உயிரைப் பறிந்த CRPF வீரர்!

அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

48 minutes ago

சுற்றி வளைக்கும் பாஜக.. திக்குமுக்காடும் திமுக.. பட்ஜெட் மீது கடும் தாக்கு!

டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…

2 hours ago

முதலில் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. அடுத்து ED சொல்கிறது.. செந்தில் பாலாஜி அட்டாக் பேச்சு!

ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

3 hours ago

நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!

நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…

3 hours ago

பில்டப் காட்டி சீன் போட்ட நயன்தாரா.. பதிலடி கொடுத்த 90களின் கனவுக்கன்னி!

நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…

4 hours ago

கத்தியை காட்டி மிரட்டி 19 வயது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தந்தையின் சபல புத்தி..!!

ஓட்டப்பிடாரம் பகுதியில் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதையும் படியுங்க…

4 hours ago

This website uses cookies.